கனமழை காரணமாக விடுமுறை கொடுக்கப்பட்ட மாவட்டங்களின் விபரம் ..!

தமிழகத்தில் பெரும்பாலான பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்னும் 3 நாளைக்கு தொடரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கன மழை காரணமாக நீலகிரி மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் சேலம்  , ராமநாதபுரம் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் வழக்கம் போல பள்ளி , கல்லூரி  நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

author avatar
murugan