கள்ளச்சந்தையில் மது – 3,762 பேர் கைது, 94,560 லிட்டர் மதுபானம் பறிமுதல்!

விஷச்சாராய குடித்ததில் 22 பேர் உயிரிழந்த நிலையில், காவல்துறை நடத்திய சிறப்பு சோதனையில் 3,762 பேர் கைது.

தமிழகத்தில் கடந்த 4 நாட்களில் நடந்த சோதனையில் கள்ள சந்தையில்  மது விற்பனை செய்த 3,762 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதில், கைதானவர்களிடமிருந்து 94,560 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை கூறியுள்ளது. விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் விஷச்சாராய குடித்ததில் 22 பேர் உயிரிழந்த நிலையில், காவல்துறை நடத்திய சிறப்பு சோதனையில் 3,762 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்