பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்பு ? மருத்துவக் குழுவுடன் முதல்வர்ஆலோசனை

ஊரடங்கு வரும் 30-ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில் மருத்துவக் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் நவம்பர் 30 -ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நோய்க்கட்டுப்பாடு பகுதி தவிர மற்ற பகுதிகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.இதனிடையே வரும் டிசம்பர் 1 முதல் டிசம்பர் 31 -ஆம் தேதி வரை பின்பற்றக் கூடிய புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது.ஊரடங்கு வரும் 30-ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில் இன்று காலை காணொலி காட்சி மூலமாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.இந்நிலையில் மருத்துவக் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.