ஐபிஎல் சூதாட்டத்தால் பறிபோன உயிர்.!

ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டு கடன் தொல்லை தாங்காமல் சோனு என்ற நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

ஹைதராபாத்தின் புஞ்சகுட்டா பகுதியில் வசித்து தேங்காய் தொழில் செய்த வந்த சோனுகுமார்(19) கொரோனா காரணமாக தனது சொந்த ஊரான ஜார்க்கண்ட்டிற்கு சென்றுள்ளார் . அதனையடுத்து சமீபத்தில் புஞ்சகுட்டாவிற்கு வந்த சோனு ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்து வந்துள்ளார். ஆனாலும் அவர் சூதாட்டம் ஆடுவதை விடாமல் நண்பர்களிடம் கடன் வாங்கி சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் பணத்தை வாங்கி கடனுக்குள் மூழ்கிய சோனு தான் தங்கியிருந்த விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் . இதனை குறித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீப காலமாக சூதாட்டத்தில் பலர் காசை பறி கொடுத்து தற்கொலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.