நமது பாட்டன் பாரதியார் நினைவைப் போற்றுவோம்! – சீமான்

பெரும்பாவலர் நமது பாட்டன் பாரதியார் நினைவைப் போற்றுவோம்.

இன்று நாடு முழுவதும் மகாகவி பாரதியாரின் 100-வது ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11-ஆம் தேதி மகாகவி நாளாக அரசு சார்பில் கொண்டாடப்படும் என அறிவித்திருந்தார்.

மகாகவி பாரதியாரின் நினைவை போற்றும் வகையில், பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரகள் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘பெரும்பாவலர் நமது பாட்டன் பாரதியார் நினைவைப் போற்றுவோம்!’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.