தேசிய ஒற்றுமைக்கான நிகழ்வாக ராமர் கோவில் பூமி பூஜை இருக்கட்டும் – பிரியங்கா காந்தி வாழ்த்து.!

தேசிய ஒற்றுமைக்கான நிகழ்வாக ராமர் கோவில் பூமி பூஜை இருக்கட்டும் – பிரியங்கா காந்தி வாழ்த்து.!

அயோத்தியில் நடக்கவுள்ள ராமர் கோவில் பூமி பூஜைக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் பூமி பூஜை நாளை நடைபெறவுள்ளது. இதற்கு வாழ்த்து தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளரான பிரியங்கா காந்தி கூறியதாவது, தேசிய ஒற்றுமைக்கான நிகழ்வாக ராமர் கோவில் பூமி பூஜை இருக்கட்டும் என்று வாழ்த்து கூறியுள்ளார்.

நாடு முழுவதும் ஸ்ரீராமனின் கோட்பாடுகளும், அவரது ஆசீர்வாதமும் பரவும் என்றும், ராமர் கோவில் பூமி பூஜை தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் கலாச்சாரங்களை ஒன்றிணைக்கும் சபையாக மாற உதவட்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் எளிமை, தைரியம், கட்டுப்பாடு, தியாகம், அர்ப்பணிப்பு ஆகிய அனைத்தும் ஸ்ரீராமனின் சிறப்பு குணங்கள். ராமர் எல்லோரிடமும் இருப்பார் என்றும் கூறியுள்ளார் .

Join our channel google news Youtube