பள்ளி திறக்கும் நாளன்று மாணவர்களுக்கு பாடபுத்தகள் உள்ளிட்டவைகளை வழங்க நடவடிக்கை.
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளன்றே பாடபுத்தகள் மற்றும் நோட்டுகள் வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால், மாவட்ட விநியோக மையங்களில் வைக்கப்பட்டுள்ள, மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பொருட்களை முன்கூட்டியே பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும் எனவும் தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
எனவே, பள்ளி திறக்கும் நாளன்று மாணவர்களுக்கு பாடபுத்தகள் உள்ளிட்டவைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.