கேரளாவில் 20 ஆயிரத்திற்கும் குறைவான கொரோனா பாதிப்பு..!

கேரள மாநிலத்தில் 20 ஆயிரத்திற்கும் குறைவான தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

கேரளாவில் இன்று ஒரே நாளில் 19 ஆயிரத்து 622 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து 22,563 பேர் குணமடைந்த நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 132 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.

மேலும், மாநிலத்தில் குணமடைந்து இதுவரை  37 லட்சத்து 96 ஆயிரத்து 317 பேர் வீடு திரும்பியுள்ளனர். தற்போது கொரோனா சிகிச்சையில் 2 லட்சத்து  09 ஆயிரத்து 493 பேர் உள்ளனர்.  கேரளாவில் தொற்று எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருவதால் தமிழக, கேரள எல்லைகளில் தீவிர கண்காணிப்பில் உள்ளன.