சட்டப்பேரவை அவை தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கு மனுதாக்கல்…!

தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் சபாநாயகர் பதவிக்கு போட்டியிட திமுக எம்.எல்.ஏ அப்பாவு-வும், துணை சபாநாயகர் பதவிக்கு போட்டியிட திமுக எம்.எல்.ஏ கு.பிச்சாண்டியும் மனுதாக்கல் செய்துள்ளனர்.

சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில், முதல்வர், அவைமுன்னவர், எதிர்க்கட்சி தலைவர், அமைச்சர்கள் மற்றும் அக்கரவரிசைப்படி எம்.எல்.ஏ-க்களுக்கும் தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம், சபாநாயகர் பதவிக்கு போட்டியிட திமுக எம்.எல்.ஏ அப்பாவு-வும், துணை சபாநாயகர் பதவிக்கு போட்டியிட திமுக எம்.எல்.ஏ கு.பிச்சாண்டியும் மனுதாக்கல் செய்துள்ளனர். இவர்கள் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படவுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.