சீருடை அணியாமல் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை – அமைச்சர் செல்லூர் ராஜூ

நியாய விலைக் கடை ஊழியர்கள் சீருடை அணியாமல் இருந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் செல்லூர் ராஜூ 

மதுரை தெப்பகுளத்தில் படகு சவாரியை துவக்கிவைத்த பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அப்போது, தமிழகத்தில் நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு சீருடை வழங்கப்படும் என்றும் நியாய விலைக் கடை ஊழியர்கள் சீருடை அணியாமல் இருந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, ரஜினி அரசியக்கு வரவில்லை என்ற அறிவிப்பு குறித்த கேள்விக்கு,  தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு ஆழமாக சிந்தித்து ரஜினி நல்ல முடிவு எடுத்துள்ளார். கட்சி தொடங்கப்போவதில்லை என்ற ரஜினியின் முடிவு வரவேற்கத்தக்கது. ரஜினி முடிவு எடுத்தது போன்று கமலும் முடிவு எடுக்க செல்லூர் ராஜூ வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்