கோவை மாவட்டத்தில் வாடகை ஹெலிகாப்டர் சேவை தொடக்கம்..!

கோவை மாவட்டம் வட்டமலை பாளத்தில் வாடகை ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் சார்பில் தொடங்கப்பட்ட இந்த ஹெலிகாப்டர் சேவை அவர்களது சொந்த தேவைக்காக வாடகைக்கு தரப்படுகிறது.

இந்த நிலையில் அதற்கான வாடகையை தந்தால் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நோயாளிகளின் அவசர சேவை உறுதியாக பயன்படுத்திக்கொள்ள முடியும். இது குறித்து ஹெலிகாப்டர் இயக்குனர் சதீஷ் சதீஷ் குமார் கூறுகையில், ஹெலிகாப்டரில் பயணம் செய்யும் பயணிகள் காய்ச்சல் சளி இருக்கிறதா என்று பரிசோதனை செய்த பிறகு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் . மேலும் இந்த ஹெலிகாப்டரில் 6 முதல் 7 பேர் பயணிகள் பயணம் செய்யலாம் என்றும் கூறியுள்ளனர்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.