குழந்தைகளின் பாதுகாப்பை கருதி, குழந்தைகள் அமைதி அமைப்பை துவங்கும் லதா ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவியான லதா ரஜினிகாந்த், கோவையில், குழந்தைகள் அமைப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், குழந்தைகள் பாதுகாப்புக்காக குழந்தைகள் அமைதி அமைப்பை துவங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மக்களிடையே வரவேண்டும் என்றும், அனைத்து விதமான இடங்களிலும், வயது பாகுபாடின்றி குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும், குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க கட்டணமில்லா தொலைபேசி என் மற்றும் இணையதளம் உருவாக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.