140 பாம்புகளுக்கு மத்தியில் வாழ்ந்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

140 பாம்புகளுக்கு மத்தியில் வாழ்ந்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

அமெரிக்காவில் உள்ள இண்டியானாவில் ஆக்ஸ்போர்ட்  பகுதியில்  லாரா ஹாஸ்ட என்கிற பெண்மணி வசித்து வந்தார். இவர் தனது வீட்டில்  பாம்புகளை செல்ல பிராணியாக வளர்த்து வந்துள்ளார்.
இவர் வீட்டில் சுமார் 140 பாம்புகள் இருந்துள்ளன. இதில் 20க்கும் மேற்பட்ட பாம்புகளை செல்ல பிராணியாக வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் இவர் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸ்காரர்களுக்கு அதிர்ச்சியான காட்சி காத்திருந்தது. அதாவது அவர் செல்லமாக வளர்த்த பாம்புகளில் ஒன்று அவரது கழுத்தை நெரிக்கும்படி சுற்றியிருந்தது. இதனால் வளர்த்த பாம்புகளே அவரை கொன்று விட்டதா, இல்லை, வேறு எதுவும் நடந்ததா என கண்டறிய அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர்தான் லாரா எவ்வாறு இறந்தார்  என்பது தெரியவரும்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube