ஊழல் வழக்கு: லாலு பிரசாத் யாதவுக்கு 4-வது வழக்கிலும் ஜாமீன்..!

தும்கா கருவூலத்தில் இருந்து ரூ.3.13 கோடி ஊழல் செய்தது தொடர்பான 4-வது வழக்கில் லாலு பிரசாத்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் 1996-ஆம் ஆண்டு முதல்வராக இருந்தபோது கால்நடைத் தீவன ஊழல் செய்தது தொடர்பாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் தும்கா கருவூலத்தில் இருந்து ரூ.3.13 கோடி ஊழல் செய்தது தொடர்பான 4-வது வழக்கில் ஜாமீன் கோரி கடந்த பிப்ரவரி மாதத்தில் லாலு பிரசாத் மனு தாக்கல் செய்தார்.

ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி தண்டனையில் பாதி காலம் முடியாததால்  மனுவை தள்ளுபடி செய்தனர். பாதி தண்டனை காலத்தை நிறைவு செய்ய 2 மாதங்கள் உள்ளதால் 2 மாதங்கள் கழித்து ஜாமீன் மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தினர். அதன்படி சமீபத்தில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.

இந்த ஜாமீன் மனு இன்று  ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி அபரேஷ் குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியுள்ளார். லாலு பிரசாத் தனது பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்க வேண்டும். நீதிமன்றத்தின் அனுமதியின்றி அவர்கள் வெளிநாடு செல்ல முடியாது. அவரது மொபைல் எண் மற்றும் முகவரியை மாற்ற வேண்டாம் என்று நீதிமன்றத்தால் அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

லாலு பிரசாத் மீது ஐந்து வழக்குகள் இருந்தன. இதுவரை, அவர் மூன்று வழக்குகளில் ஜாமீன் பெற்ற நிலையில் இன்று அவருக்கு நான்காவது வழக்கிலும்  ஜாமீன் கிடைத்துள்ளது. இப்போது லாலு யாதவுக்கு மொத்தம் நான்கு வழக்குகளில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஐந்தாவது வழக்கு டோராண்டா கருவூலம் தொடர்பான வழக்கு உள்ளது. இது குறித்து சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.

சாய்பசா கருவூலத்தில் இருந்து ரூ.37.7 கோடி ரூபாய் ஊழல் செய்தது, தியோகர் கருவூலத்தில் இருந்து ரூ.79 லட்சம் ஊழல் செய்தது, மேலும் ஒரு ஊழல் வழக்குகளில் ஏற்கனவே லாலு பிரசாத்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அவரது மகனும், எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஷ்வி யாதவ் ஜாமீன் நிலைமை குறித்து கூறினார். நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.

தற்போது அவர் எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை நடந்து வருகிறது. அவரது உடல்நிலை குறித்தும் நாங்கள் கவலை கொண்டுள்ளோம். அவரது சிறுநீரக தொற்று மிக அதிகமாக உள்ளது மற்றும் சுவாசிப்பதில் சிரமம் உள்ளது. அவர் எய்ம்ஸில் மட்டுமே சிகிச்சை பெறுவார் என தெரிவித்தார்.

murugan

Recent Posts

பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், மும்பை அணியும் மோதியது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக பஞ்சாப்…

1 hour ago

எத்தன தடவ சொல்றது ? அந்த வீரருக்கு அட்வைஸ் கொடுத்த சூர்யகுமார் !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரரான ஜிதேஷ் சர்மாவிற்கு சூரியகுமார் யாதவ் சிறிய அட்வைஸ் ஒன்று கொடுத்திருக்கிறார். பஞ்சாப் கிங்ஸ்…

4 hours ago

எம்மாடியோ! புஷ்பா 2 ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை தெரியுமா?

Pushpa 2 The Rule : புஷ்பா 2 திரைப்படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் அடுத்ததாக …

6 hours ago

கமலஹாசன் காசு கேட்டும் குடுக்கல ..!! வேதனையில் உண்மை உடைத்த பிரபலம் !!

Kamal Hasan : தமிழ் சினிமாவின் ஒப்பனை கலைஞரான புஜ்ஜி பாபு, நடிகர் கமல்ஹாசனால் ஏற்பட்ட சில கசப்பான அனுபவத்தை தனியார் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.…

6 hours ago

முகத்தில் பளபளப்பு கூட வீட்டிலேயே கிரீம் தயார் செய்யலாம்… செய்முறை இதோ….

Life Style : முகப்பொலிவு பெற வீட்டிலே கிரீம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். பொதுவாக பலருக்கும் தங்கள் முகம் பொலிவாக இருக்க…

6 hours ago

சும்மா கிளப்பாதீங்க…திரும்ப வருகிறேன்! இசையமைப்பாளர் யுவன் விளக்கம்!

Yuvan Shankar Raja: தன்னுடைய இன்ஸ்டா கணக்கு DEACTIVATE ஆன நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா எக்ஸ் தளத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர்…

6 hours ago