மாயா, ஐரா, ஆகிய திகில் நிறைந்த திரைப்படங்களை தொடர்ந்து நடிகை நயன்தாரா மீண்டும் ஒரு திகில் படத்தில் நடித்து வருகிறார்.
நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றி கண் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவுள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்கவுள்ளார். விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.
இந்த படத்திற்கு முன், தற்போது நடிகை நயன்தாரா திகில் நிறைந்த கதையை கொண்ட படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் விக்னேஷ் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. குடும்ப உறவுகள், பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட திகில் படமாக இந்த படம் உருவாகி வருகிறது. விரைவில் படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
நடிகை நயன்தாரா ஏற்கனவே இந்த திரைப்படத்திற்கு முன் மாயா, ஐரா, ஆகிய திகில் நிறைந்த திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இன்னொரு திகில் கதையிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2024: தோனி களத்திற்குள் வந்தாலே எல்லாரும் மிரண்டு போயிறாங்க என்று லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் புகழாரம். நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும்…
Ghilli ReRelease: நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா நடித்த 'கில்லி' திரைப்படம், இன்று உலகம் முழுவதும் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இயக்குனர் தரணி இயக்கத்தில் 2004ஆம் ஆண்டு…
IPL 2024 : லக்னோ உடனான போட்டியில் தோனி பேட்டிங் செய்ய களமிறங்கிய போது டி காக் மனைவியின் ஸ்மார்ட் வாட்ச் எச்சரிக்கை கொடுத்துள்ளது. ஐபிஎல் தொடரின்…
Election2024 : தென்சென்னையில் 13வது வாக்குசாவடியில் கள்ள ஓட்டு போட்டுள்ளனர் அதனால் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த தமிழிசை கோரிக்கை வைத்துள்ளார். நாடாளுமன்ற முதற்கட்ட வாக்குபதிவில், தமிழகத்தில் உள்ள…
birdsFlu : கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் தமிழ்நாடு - கேரளா எல்லையில் கண்காணிப்பு பணிகள் தீவிரம் கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள குட்டநாடு…
Actor Vijay: தமிழக வெற்றிக் கழக்கத்தின் தலைவரும், நடிகருமான விஜய் மீது, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் நேற்று மக்களவைத் தேர்தலுக்கான…