லடாக் எல்லை விவகாரம்: முதுகில் இரும்பு கம்பிகளை தூக்கி சென்ற சீன வீரர்கள்.. வெளியான தகவல்!

லடாக் பகுதியில்  கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த  15-ம் தேதி இந்தியா, சீன ராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனத் தரப்பில் 30 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாயது. பிறகு, இரண்டு நாள்கள் கழித்து சீனா இராணுவம் 10 இந்திய  ராணுவ வீரர்களை விடுவித்தது. இதனால், எல்லையில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.

பேச்சுவார்த்தையில் கிழக்கு லடாக்கில்  இந்திய, சீன படைகளை விலக்கிக்கொள்ள ஒருமித்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் விளக்கம் அளித்தது. இந்நிலையில் எல்லை கோட்டின் கிழக்குத் துறையில் உள்ள சீன  இராணுவம் படைவீர்ர்கள் இந்த வார தொடக்கத்தில் இரும்பு கம்பிகளை தங்கள் முதுகில் சுமந்து செல்வதைக் கண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஏற்கனவே நடந்த இந்திய சீன மோதலில், சீன ராணுவம் இரும்பு கம்பிகளை வைத்திருந்தாகவும் கூறப்படுகிறது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.