பழனி கோவிலில் காவடி எடுத்த எல்.முருகன், சி.டி.ரவி , அண்ணாமலை ..!

பழனியில் பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன், சி.டி.ரவி காவடி எடுத்தனர்.

தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் காவடி எடுத்தார். எல்.முருகனுடன் தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி ரவி, மற்றும் அண்ணாமலை உள்ளிட்டோரும் காவடி எடுத்துச் சென்றனர்.

தமிழக அரசு தைப்பூசத்திற்கு விடுமுறை அளித்ததிற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், வேல்யாத்திரை சிறப்பாக நடந்து முடிந்தற்காகவும் எல்.முருகன் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செய்தார்.

author avatar
murugan