#Breaking:கூடங்குளம் அணுக்கழிவுகள் – உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு!

#Breaking:கூடங்குளம் அணுக்கழிவுகள் – உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு!

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள அணுக்கழிவுகளை கையாளுவதில் தற்போதைய நிலையே தொடரும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கூடங்குளத்தில் உள்ள அணுக்கழிவுகளை அப்படியே கடலில் கொட்டுகிறார்கள் எனவும்,அணுக்கழிவுகளை கையாளுவதில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படவில்லை எனவும்,எனவே இதனை முறையாக கையாளுவதற்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி கடந்த 2019 ஆம் ஆண்டு பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தரராஜன் என்பவர் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதனையடுத்து,அணுக்கழிவுகளை கையாளுவதில் முறையான பாதுகாப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என தொடரப்பட்ட இவ்வழக்கை மே 4 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

 

 

Join our channel google news Youtube