தொடர்ந்து பச்சை மண்டலமாக நீடிக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம்!

தொடர்ந்து பச்சை மண்டலமாக நீடிக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம். பரிசோதனை மேற்கொண்ட 11 பேருக்கு கொரோனா தொற்று இல்லை.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தியா அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இந்தியாவில் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. இதனால் இந்த மாவட்டம் தொடர்ந்து பச்சை மண்டலமாக நீடித்து வருகிறது.

இதனையடுத்து, கொரோனா பரிசோதனை மேற்கொண்ட 11 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதியானதை தொடர்ந்து, இம்மாவட்டத்தை பச்சை மண்டலமாக வைத்திருக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.