கோழிக்கோடு விமான விபத்து பெரும் அதிர்ச்சி அளிக்கிறது – டிடிவி தினகரன்

கோழிக்கோடு விமான விபத்து பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

துபாயில் இருந்து நேற்று பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. இந்நிலையில், கேரளாவில் கனமழை பெய்து வருவதால் விமானத்தை தரை இறக்க விமானி முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக விமானம் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து குறித்து பலரும் தங்களது கருத்துக்களையும், இரங்கலையும் தெரிவித்து வருகிற நிலையில், அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் விமான விபத்து குறித்து, ‘கோழிக்கோடு விமான விபத்து பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.