கொவிட்-19 : கொரோனா வைரஸால் அச்சத்தின் உச்சத்தில் இருக்கும் சீனா.!

கொவிட்-19 : கொரோனா வைரஸால் அச்சத்தின் உச்சத்தில் இருக்கும் சீனா.!

கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதும் கொரோனா (கொவிட்-19) வைரஸின் கோர தாண்டவம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. முதன்முதலில் சீனாவில் ஆரம்பித்துப் பரவத் தொடங்கிய, இந்த வைரஸ் பாதிப்பு சீனாவைத் தாண்டி இந்தியா, சிங்கப்பூர், அமெரிக்கா என உலகம் முழுக்க 25க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில், சீனா வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் அந்நாட்டை வாட்டிவதைக்கிறது.

இதனால் சீனாவில் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் வைரசால் நேற்று (வியாழக்கிழமை) வரை பலியின் எண்ணிக்கை 1,383-ஆக உயர்ந்துள்ளது. அதில் நேற்று மட்டும் 121 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த வைரசால் புதிதாக 5,090 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64,000-ஐ தொட்டுள்ளது. இதனிடையே இந்த கொடூர வைரசால் சுகாதார ஊழியர்கள் 1,716 பேர் பாதிக்கப்பட்டு, அதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், சீன மருத்துவனையின் மருத்துவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை நடனமாட வைத்து, நோயிலிருந்து மீள்வது குறித்து நம்பிக்கையூட்டி வருகின்றனர். சீனாவில் கொரோனா வைரஸால் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் ஹுபே மாகாணம் முழுவதும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் காணப்படுகிறது. வைரஸ் பரவுவதைத் தடுக்க போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. யாரும் யாருடைய வீட்டிற்கும் செல்லக் கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பின்னர் இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முனைப்பில் தீவிர ஆய்வு செய்து வருகிறது உலக சுகாதாரத்துறை.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube