கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு! குற்றவாளிகளுக்கு மரணதண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்!

2010ஆம் ஆண்டு பள்ளிக்குழந்தைகளை கடத்தி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து, சிறுவனையும் கொலை செய்த கொடூர கும்பலுக்கு கோவை நீதிமன்றம் வழக்கைவிசாரித்து மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.  அதில் ஒரு குற்றவாளி போலீஸ் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டார்.

அதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அங்கும் மரணதண்டனை உறுதியானது. பின்னர் அந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை தள்ளுபடி செய்து  குற்றவாளி மனோகரனுக்கு மரண தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.