கொரோனா பீதி… இந்திய நாடாளுமன்றத்தில் நுழைய தடை… அறிவித்தார் மக்களவை செயலர்..

உலகம் முழுவதும்  விரைவாக பரவிவரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் இருப்பது உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது 31 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.  இந்நிலையில் வருகிற 11 ஆம் தேதி முதல் நாடாளுமன்றத்தை பார்வையிட வரும் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக, மக்களவை செயலர் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைவதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்றும் . 
அதன்படி, இரு அவைகளையும் சேர்ந்த உறுப்பினர்கள்  அவர்கள் உடன் பார்வையாளர்களை அழைத்துவரக் கூடாது. பிற பார்வையாளர்கள் நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வரும் புதன்கிழமை 11-ம் தேதி ஹோலி விடுமுறைக்குப் பிறகு நாடாளுமன்றம் தொடங்கவுள்ளது. இத்ன் பின் இந்தக் கட்டுப்பாடுகள் பொருந்தும். என்று அந்த சுற்றறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளது.
author avatar
Kaliraj