டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்து வீச முடிவு…!

டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச தேர்வு செய்துள்ளனர்.

ஐபிஎல் 14 சீசனின் இன்றைய 34 வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய இரு அணிகள் மோதுகின்றன. இப்போட்டியானது, அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச தேர்வு செய்துள்ளனர்.

மும்பை அணி:

குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், சௌரப் திவாரி, பொல்லார்ட், க்ருனால் பாண்டியா, ஆடம் மில்னே, ராகுல் சாஹர்,பும்ரா, ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் இடம்பெற்றனர்.

கொல்கத்தா அணி:

சுப்மேன் கில், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, இயோன் மோர்கன் (கேப்டன்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், லோக்கி பெர்குசன், வருண் சக்கரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெற்றனர்.

author avatar
murugan