கோலியிடம் பல திட்டங்கள் உள்ளது – சிராஜ் ஓபன் டாக்..!!

கோலியிடம் பல திட்டங்கள் உள்ளது – சிராஜ் ஓபன் டாக்..!!

விராட் கோலியிடம் பல திட்டங்கள் உள்ளது என்று பெங்களூர்  அணி வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் தெரிவித்துள்ளார். 

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் பெங்களூர் – ஹைதராபாத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 149 ரன்கள் எடுத்தனர். இதில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 59 ரன் எடுத்தார். 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்கியது.

தொடக்கத்தில் சற்று தடுமாறிய ஹைதராபாத் அணி, இறுதியாக டேவிட் வார்னரின் நிதானமான ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 143 ரன்கள் எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

வெற்றியடைந்த பிறகு பேசிய பெங்களூர்  அணி வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் கூறியது ” இந்த மைதானம் சுழற் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்தது. அதனால் சரியாக விராட் கோலி ஷாபாஸ் அகமதுவுக்கு வாய்ப்பளித்தார். இதற்கு முக்கிய காரணமே மனீஷ் பாண்டே பேர்ஸ்டோ  ஆகிய இருவரையும் வீழ்த்துவதற்கு சுழற் பந்து வீச்சாளர் ஷாபாஸ் அகமதுவை பயன்படுத்தினர். அவர் நினைத்தது போல் நடந்து விட்டது. இதைபோல் விராட்கோலியிடம் பல திட்டங்கள் உள்ளது என்றும் முகமது சிராஜ் கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube