பெங்களூர் அணி 16.3 ஓவர் முடிவில் ரன்கள் 181 எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்று ஐபிஎல் தொடரின் 16- வது லீக் போட்டியில் பெங்களூர் அணியும், ராஜஸ்தான் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதியது. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர்.
முதலில் இறங்கிய ராஜஸ்தான் அணி20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை பறிகொடுத்து 177 ரன்கள் எடுத்தனர். 178 ரன்கள் இலக்குடன் பெங்களூர் அணியின் தொடக்க வீரர்களாக கோலி, படிக்கல் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து இருவரும் மரண அடி அடித்தனர்.
இதனால், இருவரும் அரைசதம் விளாசினர். அதிலும் அதிரடியாக விளையாடிய படிக்கல் 27 பந்தில் 52 ரன்கள் எடுத்து அரைசதம் அடித்தார். இதைத்தொடர்ந்து, அதிரடி காட்டி வந்த படிக்கல் 51 பந்தில் 11 பவுண்டரி, 6 சிக்ஸர் விளாசி ரன்கள் 101* எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார்.
அதேபோல கோலி 47பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்ஸர் விளாசி 72* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார்.
இறுதியாக பெங்களூர் அணி 16.3 ஓவர் முடிவில் ரன்கள் 181 எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூர் அணி விளையாடிய 4 போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 8 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளனர்.
ஐபிஎல் 2024 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி வீரரான சிவம் துபேவை அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் பாராட்டி பேசி உள்ளார். நடைபெற்று கொண்டிருக்கும் இந்த…
BOI Recruitment 2024: பேங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பேங்க் ஆப் இந்தியாவில் (BOI) காலியாக உள்ள 143 பணியிடங்களை…
M.G.Ramachandran : அனுமதி கேட்காமல் தன்னை புகைப்படம் எடுத்தாததால் எம்.ஜி.ஆர் அந்த சமயம் கடுமையாக கோபம் அடைந்துள்ளார். சினிமாவில் இருக்கும் பிரபலங்களை நேரில் பார்க்கும்போது புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளவேண்டும்…
Election2024: மின்னணு வாக்கு இயந்திரத்தில் பாஜகவுக்கு கூடுதல் வாக்கு விழுவதாக எழுந்த புகாருக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு. கேரளா மாநிலத்தில் உள்ள 20 மக்களவை…
Jio Hotstar Plan : ஜியோவில் வருடாந்திர ரீசார்ஜ் செய்பவர்களுக்காக ஒரு அசத்தலான ஹாட்ஸ்டார் திட்டம் வந்து இருக்கிறது. ஜியோ சிம் பயன்படுத்தி வருபவர்கள் பலரும் ரீசார்ஜ்…
Sweating-கோடை காலத்தில் ஏற்படும் அதிக வியர்வையை கட்டுப்படுத்துவது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். பலரும் வேர்வை துர்நாற்றத்தால் மன உளைச்சலுக்கு சென்று விடுகின்றனர். அதுவும் வெயில்…