பாகிஸ்தானை வேட்டையாடிய கோலி , ரோஹித் !இமாலய இலக்கு வைத்த இந்திய அணி !

இன்றைய போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும்  மோதி வருகிறது. இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
 இந்திய அணியில் தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல் , ரோஹித் ஷர்மா இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடிய இருவரும் அணியின் எண்ணிக்கை உயர்த்தினார்.
நிதானமாக விளையாடிய ரோஹித் ஷர்மா அரைசதம் நிறைவு செய்தார். பிறகு சிறிது நேரத்தில் லோகேஷ் ராகுலும் அரை சதம் அடித்தார்.பின்னர் 24 ஓவரில் பாபர் ஆசாமிடம் கேட்ச் கொடுத்து 57 ரன்னில் வெளியேறினார்.

பிறகு களமிறங்கிய கோலி , ரோஹித் ஷர்மா இருவரும் கூட்டணி இணைய இவர்களின் விக்கெட்டை பறிக்க பாகிஸ்தான் அணி திணறியது.அப்போது 30 ஓவரில் ரோஹித் ஷர்மா தனது சதத்தை நிறைவு செய்து பிறகு 140 ரன்னில் அவுட் ஆனார்.
அடுத்ததாக கமிறங்கிய ஹர்திக் பாண்டிய 2 பவுண்டரி ,1 சிக்ஸர் விளாசி 26 ரன்கள் குவித்து வெளியேறினார்.பின்னர் தோனி 1 ரன்னும் ,கோலி 77 ரன்னும் எடுத்து அவுட் ஆனார்கள்.இறுதியாக இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 336 ரன்கள் குவித்தது.
பாகிஸ்தான் அணி பந்து வீச்சில் முகமது அமீர் 3 விக்கெட்டை பறித்தார்.பாகிஸ்தான் அணி 337 ரன்கள் இலக்குடன் களமிறங்கி உள்ளது.
 

author avatar
murugan