கோலியை இதோடு எல்லாம் ஒப்பிடக்கூடாது தாதா தடாலடி பேச்சு

ஐபிஎல் 2019 போட்டியானது தற்போது நடந்து முடிந்துள்ளது.இதில் மும்பை கோப்பையை வென்று சாதனைப் படைத்துள்ளது. சென்னை தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில் ஒருவர் ஜோலிக்காதது கருத்தில் கொண்டீர்களா என்று  ரசிகர்கள் கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர்   உள்ளிட்ட அனைவரும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி குறித்து விமர்சங்களை வைத்தனர்.

Image result for KOHLI

ஐபிஎல் போட்டியில் கோப்பையை வெல்லாத கோலியால் எப்படி உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட முடியும்.மேலும் பெங்களுரு இந்த வருடம் ஐபிஎல் 14 ஆட்டத்தில் 5 வெற்றி, 8 தோல்வி அடைந்து 11 புள்ளிகளுடன் அந்த அணி கடைசி இடத்தை பிடித்தது.கோப்பையை வெல்லாத விராட்கோலி அந்த அணியின் கேப்டனாக நீடிப்பதற்கு கோலி தான் அந்த அணி நிர்வாகத்துக்கு நன்றி சொல்ல வேண்டும்.என்று கம்பீர் விமர்சித்து இருந்தார்.

Image result for KOHLI

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்தார்.அதில் கோலியின் கேப்டன் ஷிப்பை ஐபிஎல்லோடு ஒப்பிடாதீர்கள். மேலும் அவருடைய கேப்டன் ஷிப் சர்வதேச போட்டிகளில் நன்றாகவே இருந்துள்ளது.இந்திய அணி தற்போது நல்ல வலுவோடு இருக்கிறது .துணைக் கேப்டனாக ரோகித் மற்றும் டோனி அணியில் உள்ளார்.

Related image

மேலும் ஹர்த்திக் பாண்டியா ஆல் ரவுண்டராக நல்ல பாமில் உள்ளார்.இவர் இந்திய அணியில் இருப்பது அவசியமாகும்.மேலும் இந்திய அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பில் இருப்பதால்  நெருக்கடி இருக்கும். இதுவே இந்திய வீரர்களிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை நன்றாக  வெளிப்படுத்தும்.என்று  தெரிவித்துள்ளார்.

 

author avatar
kavitha

Leave a Comment