கோடநாடு வழக்கு – தீபுவிடம் ஐஜி விசாரணை!

கோடநாடு வழக்கு – தீபுவிடம் ஐஜி விசாரணை!

கோடநாடு கொள்ளை, கொலை வழக்கு தொடர்பாக தீபுவிடம் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் விசாரணை.

கோடநாடு கொள்ளை, கொலை வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட நபரான தீபுவிடம் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தீபுவிடம் இரண்டு முறை விசாரணை தள்ளிப்போன நிலையில், இன்று விசாரணை நடைபெற்று வருகிறது.

மனோஜ், சயான், சதீசன், பிஜின்குட்டி ஆகியோரிடம் ஏற்கனவே  காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி ஆகியோரிடம் தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தி உள்ளனர். முந்தைய விசாரணையின் போது, அளித்த தகவல்கள், தற்போதைய மறு விசாரணை தகவல்களை கொண்டு காவல்துறை அடுத்தகட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube