கொடநாடு கொள்ளை -கொலை காரணம் முதல்வர்..!!குற்றம்சாட்டிய சயன், மனோஜ் புழல் சிறையில் அடைக்க திட்டம்..!!

தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் கூறிய கொடநாடு கொள்ளை மற்றும் கொலை குறித்து பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தமிழக முதல்வர் தான் காரணம் என்று குற்றச்சாட்டினார். ஆனால் இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது மட்டுமல்லாமல் இந்த குற்றசாட்டுகளுக்கு மறுப்பும் தெரிவித்தார்.

இந்த நிலையில் குற்றச்சாட்டுகளை முன்வைத்த மேத்யூ மற்றும் சயன் ஆகியோரை விசாரணை செய்ய தமிழகத்தில் இருந்து துணை ஆணையர்கள் தலைமையிலான இரண்டு தனிப்படை போலீஸார் டெல்லி விரைந்தனர்.இருவரும் துவாரகா பகுதியில் சயன், மனோஜ் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது  செய்தனர்.

டெல்லியில் கைது செய்யப்பட்ட சயன், மனோஜ்  இருவரும் சென்னை அழைத்து வரப்பட்டனர். எழும்பூரில் உள்ள நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி இருவரையும் போலீசார் புழல் சிறையில் அடைக்க திட்டமிடுள்ளனர்.மேலும் கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் முதல்வர் மீது சயன் புகார் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
kavitha

Leave a Comment