லங்கா பிரீமியர் லீக் எப்பொழுது தொடங்குகிறது தெரியுமா..?

ஐபிஎல் போட்டிகள் முடிந்து நவம்பர் 20ஆம் தேதி முதல் டிசம்பர் 12ஆம் தேதி வரை லங்கா பிரீமியர் லீக் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது , இலங்கை கிரிக்கெட் வாரியம் சார்பில் தொடங்கவிருந்த லங்கா பிரீமியர் லீக் 20 ஓவர் போட்டி
வருகின்ற 28ம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் வெளி நாட்டிலிருந்து வரும் வீரர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்படும் நாட்கள் குறைக்கப்படும் அல்லது தளர்ச்சி கொள்ள சுகாதாரத் துறை அனுமதி வழங்கும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் நம்பிக் கொண்டிருந்தது.

இந்த நிலையில் அந்த நாட்டு அரசு கட்டாயம் 14 நாட்கள் வீரர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு இருப்பதால் தற்பொழுது சிக்கல் ஏற்பட்டுள்ளது இந்நிலையில் இந்த சிக்கல் காரணமாக லங்கா பிரீமியர் லீக் நவம்பர் மாதம் நடைபெறும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது, இந்நிலையில் மேலும் ஐபிஎல் போட்டிகள் முடிந்து நவம்பர் 20ஆம் தேதி முதல் டிசம்பர் 12ஆம் தேதி வரை லங்கா பிரீமியர் லீக் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.