# பாக்.,கிருஷ்ணர் கோவில்# விவகாரம் மனு தள்ளுபடி!

பாகிஸ்தானில், கிருஷ்ணர் கோவில் கட்டுவதற்கு தடை விதிக்கக் கோரிய மனுக்களை  நீதிமன்றம், தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

அண்டை நாடான பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில், முதல் முறையாக பகவான் கிருஷ்ணர்க்கு கோவில் கட்ட சமீபத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது.மேலும் இதற்காக, 20 ஆயிரம் சதுர அடி நிலத்தை, தலைநகர மேம்பாட்டு ஆணையம் ஆனது ஒதுக்கி இருந்தது.

இந்நிலையில் இவ்விவகாரத்தில்  பிரதமர் இம்ரான் கானின் கூட்டணி கட்சியான, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் – குவைட் உட்பட, பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு இஸ்லாமாபாதில், கோவில் கட்ட தடை விதிக்க வேண்டும் என்றும் மாறாக கோவில் கட்ட  வழங்கப்பட்ட நிலத்தை திரும்ப பெறக் கோரியும், பாக்., நீதிமன்றத்தில், மூன்று மனுக்கள் தாக்கல் ஆனது செய்யப்பட்டது.ஆனால் இந்த மனுக்களை எல்லாம் பாக்., நீதிமன்றம்  தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
kavitha