புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு கொரோனா தொற்று இல்லை!

புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு கொரோனா தொற்று இல்லை!

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லையென அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதுச்சேரியில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன்காரணமாக அங்கு சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், புதுச்சேரி மாநில ஆளுநர் அலுவலகத்தில் பணிபுரிந்த அலுவலகத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதன்காரணமாக ஆளுநர் அலுவலகம், நேற்று முதல் இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அவருடன் தொடர்பில் இருந்த நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை முடிவில், அவருக்கு தொற்று இல்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Join our channel google news Youtube