ஐபில் போட்டிகள்: இந்தோரில் ஆடவுள்ள கிங்ஸ் XI பஞ்சாப் அணி…!!

ஏப்ரல் 7ம் தேதி தொடங்கவிருக்கும் ஐபில் போட்டிகளில் கிங்ஸ் XI பஞ்சாப் அணி தனது கடைசி போட்டிகளை இந்தோரில் ஆடவுள்ளது. இதன் படி, போட்டிகள் நடைபெறும் இடங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 15, 19 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடவிருக்கும் போட்டிகள் மொஹாலியில்நடைபெறும் என்றும் மே 4, 6, 12 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறும் போட்டிகள் இந்தோரில் நடைபெறும் என்று ஐபில் தலைமை நிறுவனர் தெரிவித்துள்ளார். மே 21-23 வரை சண்டிகர் விமான நிலையம் சீரமைப்பு பணிக்காக மூடப்படும் என்பதே இந்த மாற்றத்திற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment