#IPL2020: ஹூடா அதிரடி ! சென்னை அணிக்கு 154 ரன்கள் இலக்கு

#IPL2020: ஹூடா அதிரடி ! சென்னை அணிக்கு 154 ரன்கள் இலக்கு

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 153 ரன்கள் அடித்துள்ளது.  

இன்றைய ஐபிஎல் தொடரின் 53- வது லீக் போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதி வருகின்றது.இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி ,முதலில் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக  ராகுல் – மயங்க் ஆகியோர் களமிறங்கினார்கள்.தொடக்கத்தில் மயங்க் 26 ரன்களில் ஆட்டமிழந்தார்.இவரைத்தொடர்ந்து ராகுல் 29 ரன்கள் , கெயில் 12 ரன்கள்,பூரன் 2 ரன்கள்,மந்தீப் 14 ரன்கள் ,ஜிம்மி 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்கள்.ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் தீபக் ஹூடா சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார்.

 இறுதியாக 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் அடித்தது.களத்தில் ஹூடா  62 *ரன்கள் , ஜோர்டன் 4* ரன்களுடன் இருந்தனர்.154 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது சென்னை அணி களமிறங்கவுள்ளது. சென்னை அணியின் பந்துவீச்சில் லுங்கி என்கிடி 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

Join our channel google news Youtube