கடந்த சில நாட்களாக மத்திய அரசை,அரசியல் தலைவர்கள் பலரும் ஒன்றிய அரசு என குறிப்பிட்டு வருகின்றனர்.இதனால்,மத்திய அரசுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில்,அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும்,தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்,’மக்கள் எப்போதும் அழைப்பது போல் ‘மத்திய அரசு’ என்றே அழைக்கலாம் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில்,மத்திய அரசை “பாரத பேரரசு” என அழைப்போம்,என்று பாஜகவைச் சேர்ந்தவரும் நடிகையுமான குஷ்பு ட்வீட் செய்துள்ளார்.
இதுகுறித்து குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
பல ஆண்டுகளாக எதிர்ப்பில் இருந்தபோதிலும்,மத்திய அரசு என்று அழைப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.எங்கள் தமிழக மாநிலத்தில்,தரம் தாழ்ந்த அரசியல் சூழ்நிலை நிலவுகிறது. எனவே,தமிழகத்தில் மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என அழைத்தால்,நாங்கள் ‘பாரத பேரரசு’ என்று அழைப்போம்.இது, அவர்களுக்கு மேலும் புரிந்துகொள்ள உதவும் என்று நான் நம்புகிறேன்.
மேலும்,மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பதில் பெருமிதம் கொள்கிறவர்கள் அனைவரும்,மத்திய அரசின் அதிகபட்ச நலன்களை அனுபவித்து வருபவர்கள்தான்”,என்று கூறி பதிவிட்டுள்ளார்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரரான ஜிதேஷ் சர்மாவிற்கு சூரியகுமார் யாதவ் சிறிய அட்வைஸ் ஒன்று கொடுத்திருக்கிறார். பஞ்சாப் கிங்ஸ்…
Pushpa 2 The Rule : புஷ்பா 2 திரைப்படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் அடுத்ததாக …
Kamal Hasan : தமிழ் சினிமாவின் ஒப்பனை கலைஞரான புஜ்ஜி பாபு, நடிகர் கமல்ஹாசனால் ஏற்பட்ட சில கசப்பான அனுபவத்தை தனியார் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.…
Life Style : முகப்பொலிவு பெற வீட்டிலே கிரீம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். பொதுவாக பலருக்கும் தங்கள் முகம் பொலிவாக இருக்க…
Yuvan Shankar Raja: தன்னுடைய இன்ஸ்டா கணக்கு DEACTIVATE ஆன நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா எக்ஸ் தளத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர்…
Rohit Sharma : இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மா ரிஷப் பண்ட்டை பற்றி பாராட்டி பேசியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தற்போது…