ஏப்ரல்-14 இல் வெளியாகவுள்ள கே.ஜி.எப்-2..!

ஏப்ரல்-14 இல் வெளியாகவுள்ள கே.ஜி.எப்-2..!

கே.ஜி.எப்-2 திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 

பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான கே.ஜி.எஃப் திரைப்படம் பிளாக் பஸ்டர் வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த இரண்டாம் பாகத்தில் ராக்கி என்ற கதாபாத்திரத்தில் யாஷ், அதீரா என்ற கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கின்றனர்.

ஸ்ரீநிதி ஷெட்டி, நடிகர் ரவீனா டண்டன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியானதை தொடர்ந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பெருமளவு அதிகரித்துள்ளது.

கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் ரிலீஸ் செய்வது தாமதமாகி கொண்டிருந்தது. தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து திரையரங்குகள் திறக்கப்பட்டு வருவதால் இந்த படத்தின் வெளியீடு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. கே.ஜி.எப்-2 திரைப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிட உள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join our channel google news Youtube