கேரள மின்துறை அமைச்சர் எம்.எம்.மணிக்கு கொரோனா தொற்று உறுதி.!

கேரள மின்துறை அமைச்சர் எம்.எம்.மணிக்கு கொரோனா தொற்று உறுதி செயப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையில், மணி அண்மையில் பெருமூளை ரத்தக்கசிவு ஏற்பட்டு ஜூன் மாதம் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். மேலும், கடந்த வாரத்தில் அமைச்சருடன் தொடர்பு கொண்ட நபர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

அந்த வகையில், சமீபத்தில் கொரோனாவிலிருந்து மீண்ட தொழில்துறை அமைச்சர் இ.பி.ஜெயராஜன், தலைச்சுற்று காரணமாக நேற்று மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார் தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.