#Plane Crash: கேரளா விமானம் விபத்து.. விமானி உயிரிழப்பு..!

துபாயிலிருந்து கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் பொழுது ஓடுபாதையில்  நிற்காமல் சறுக்கி கொண்டு சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் விமானம் இரண்டாக உடைந்தது. இந்த விமானத்தில் 2 விமானிகள், 6 விமான பணிப்பெண்கள், 10 கைக்குழந்தைகள் உட்பட 191 பேர் பயணம் செய்தனர்.

தகவல் அறிந்து  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த விமானத்தை இயக்கிய  2 விமானிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.சில பயணிகள் கவலைக்கிடமாக உள்ளதாக  தகவல் தெரிவிக்கிறது .இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது .மேலும் தேசிய மீட்டப்புப்படை வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .

இந்த விமானம் துபாயிலிருந்து, கோழிக்கோடு வந்ததால் அதிக பயணிகள் இந்தியாவை சார்ந்தவர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், வெளிநாட்டு பயணிகள் பயணம் செய்தார்களா..? என விசாரணை நடைபெற்று வருகிறது.

இதன் முழு விவரம் தொடர்ச்சியாக பதிவிடப்படும் ..

author avatar
murugan