நடிகை தமன்னாவுக்கு கேரள நீதிமன்றம் நோட்டீஸ் – ஏன் தெரியுமா?

பலரின் உயிரை காவு வாங்கும் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு விளம்பரம் செய்து வந்ததால் நடிகை தமன்னா மற்றும் பிரபல மலையாள காமெடி நடிகர் அஜு வர்கீஸ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில காலங்களாகவே ஆன்லைன் மூலமாக ரம்மி விளையாடி அதன் மூலம் பணத்தை இழந்து கடனுக்குள் தள்ளப்படுவதால், மன அழுத்தத்தில் பலர் தற்கொலை செய்து உயிர் இழக்கின்றனர். இந்நிலையில் இந்த விளையாட்டை தடை செய்யுமாறு பல்வேறு சமூக ஆர்வலர்களும், பிரபலஙகளும் தொடர்ந்து கூறி வருகின்றனர். இறப்பவர்கள் ஒருபுறமிருக்க இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை விளம்பரப்படுத்த கூடிய பிரபலங்களும் ஒருபுறம் இருக்கத்தான் செய்கிறார்கள். பிறரின் உயிரை காவு வாங்க கூடிய இந்த விளையாட்டு தடை செய்யப்பட வேண்டும் என்று பலர் கேட்டு இருந்த நிலையில், திரை உலக பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் இந்த விளையாட்டைத் தொடர்ந்து விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக நடிகர்களில் தமன்னா, பிரகாஷ்ராஜ், சுதீப், கேரளா மலையாள நடிகர் அஜு வர்கீஸ் ஆகியோர் விளம்பரப்படுத்துகின்றனர். கிரிக்கெட் வீரர்களும் விராட் கோலி உள்ளிட்ட பிரபலங்கள் விளம்பரப்படுத்தி வருகின்றனர். எனவே இவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என அண்மையில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரு இளைஞர் இந்த ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் 27 லட்சம் ரூபாயில் இழந்து விட்டதாக தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அடுத்து கேரள நீதிமன்றத்தில் ஒருவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் கிரிக்கெட் வீரர் மற்றும் மற்ற பிரபலங்கள் உட்பட தமன்னா மற்றும் காமெடி நடிகர் அஜு வர்கீஸ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

Rebekal

Recent Posts

20 வருடம் கழித்து ‘கில்லி’ படத்தை ஓகோன்னு கொண்டாடும் தளபதி ரசிகர்கள்.!

Ghilli ReRelease: நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா நடித்த 'கில்லி' திரைப்படம், இன்று உலகம் முழுவதும் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இயக்குனர் தரணி இயக்கத்தில் 2004ஆம் ஆண்டு…

9 mins ago

‘தல’ தோனியின் மாஸ் என்ட்ரி !! வார்னிங் கொடுத்த டி காக் மனைவின் ஸ்மார்ட் வாட்ச் !!

IPL 2024 : லக்னோ உடனான போட்டியில் தோனி பேட்டிங் செய்ய களமிறங்கிய போது டி காக் மனைவியின் ஸ்மார்ட் வாட்ச் எச்சரிக்கை கொடுத்துள்ளது. ஐபிஎல் தொடரின்…

12 mins ago

சென்னையில் கள்ள ஒட்டு.? மீண்டும் வாக்குப்பதிவு நடத்தணும்.! தமிழிசை புகார்.!

Election2024 : தென்சென்னையில் 13வது வாக்குசாவடியில் கள்ள ஓட்டு போட்டுள்ளனர் அதனால் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த தமிழிசை கோரிக்கை வைத்துள்ளார். நாடாளுமன்ற முதற்கட்ட வாக்குபதிவில், தமிழகத்தில் உள்ள…

34 mins ago

மீண்டும் பறவை காய்ச்சல்.. தமிழக எல்லையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

birdsFlu : கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் தமிழ்நாடு - கேரளா எல்லையில் கண்காணிப்பு பணிகள் தீவிரம் கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள குட்டநாடு…

34 mins ago

தேர்தல் விதிகளை மீறினாரா நடிகர் விஜய்? சென்னை போலீசில் பறந்தது புகார்.!

Actor Vijay: தமிழக வெற்றிக் கழக்கத்தின் தலைவரும், நடிகருமான விஜய் மீது, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் நேற்று மக்களவைத் தேர்தலுக்கான…

37 mins ago

வாக்குப்பெட்டியை பாதுகாக்கும் ஸ்ட்ராங் ரூம்… சுவாரஸ்ய தகவல்கள்…

Election2024: மக்களவை தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று முடிந்த நிலையில், வாக்கு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டது. மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று தமிழகம் மற்றும்…

47 mins ago