கேரள விமான விபத்து: ஒரு குழந்தை உட்பட பலி எண்ணிக்கை 14ஆக உயர்வு.!?

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை இயக்கிய  2 விமானிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், தற்போது ஒரு குழந்தை உட்பட பலி எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானமானது, தரையிறங்கும்போது ஓடுபாதையில்  நிற்காமல் சறுக்கி கொண்டு சென்று விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் விமானம் இரண்டாக உடைந்தது. இவ்விமானத்தில் 2 விமானிகள், 6 விமான பணிப்பெண்கள், 10 கைக்குழந்தைகள் உட்பட 191 பேர் பயணம் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விமானத்தை இயக்கிய  2 விமானிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், தற்போது ஒரு குழந்தை உட்பட பலி எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.