கேரளாவில் இடதுசாரி கூட்டணி கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்று தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியைக் பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.
கேரளாவில்,கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி 99 தொகுதிகளில் வெற்றி பெற்றது,இதனையடுத்து பினராயி விஜயன் முதல்வரானார்.அதே சமயம், காங்கிரஸ் கூட்டணி 41 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.ஆனால், பாஜகவுக்கு ஒரு தொகுதியில் கூட வெற்றி கிடைக்கவில்லை.
இந்த நிலையில்,கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையானது நேற்று நடைபெற்றது. இதில், கேரளாவில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் இடதுசாரி கூட்டணி கட்சியானது 99 இடங்களில் வெற்றி பெற்று,தொடர்ந்து 2வது முறையாக கேரளாவில் ஆட்சியைப் பிடித்துள்ளது.இதனால்,மீண்டும் பினராயி விஜயன் முதல்வர் பொறுப்பை ஏற்க உள்ளார்.இதனையடுத்து,பினராயி விஜயனுக்கு பல்வேறு கட்சித்தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கேரளாவில்,கடந்த 40 ஆண்டுகளாக இடதுசாரி கட்சிகளும்,காங்கிரஸ் கூட்டணியும் மாறி மாறி ஆட்சி அமைத்து வந்தன.இந்நிலையில்,தற்போது தொடர்ந்து 2 வது முறையாக இடதுசாரி கட்சிகள் ஆட்சியைப் பிடித்து வரலாற்று சாதனைப் படைத்துள்ளன.