கீழடி 6ஆம் கட்ட அகழாய்வில் புதிய 6 உறைகொண்ட உறைகிணறு கண்டுபிடிப்பு…

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் தற்போது நடைபெற்று வரும்  கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. அதில் கீழடி,கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றது, இதில் கீழடியில்  நடைபெற்ற அகழாய்வின் போது 6அடுக்கு உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இந்த  ஒரு உறையானது  முக்கால் அடி உயரமும் இரண்டு அறை  அடி அகலமும் கொண்டு உள்ளது. இதில்  மொத்தம் 6 உறைகள் கொண்ட அடுக்கு கிணறு கண்டு பிடிக்கபட்டு உள்ளது. கீழடியை பொறுத்த வரை முதன் முறையாக உறை கிணறு கண்டுபிடித்து இருப்பது முதல் முறை.  ஏற்கனவே இந்த கீழடி பகுதியில் விலங்குகளின்  எழும்புகள், கட்டிட சுவர்கள் ,சிறிய பெரிய பனைகள், கழிவு நீர் வாய்கால்கள், இரும்பு உலைகள் ஆகியவை கண்டுப்பிடிக்கபட்டுள்ளன. தற்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த உறைகிணறுகள் தண்ணீரை எவ்வாறு சேமித்து வைக்க வேண்டும், தண்ணீரை பயன்பாடுகளை பண்டைய தமிழர்கள் முக்கியத்துவம் கொடுத்து இருப்பது ஆய்வில் தெரிய வருகின்றது.  உறைகிணறு என்பது மணற்பாங்கான இடங்களில் நீர் தேக்கி வைக்கும் நுட்பம் ஆகும்.

author avatar
Kaliraj