நடிகை கஸ்தூரி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

நடிகை கஸ்தூரி  சாதி கலவரத்தை தூண்டும் விதமாக பேசியதாக மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் வெள்ளம்புத்தூர் எனும் கிராமத்தில் கடந்த மாதம் 22 ஆம் தேதி  சிறுவனை அடித்து கொலை செய்ததோடு, தாயை அடித்து துன்புறுத்தி சிறுமியை மர்ம கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இது குறித்து நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்க பதிவில் ஒரு குறிப்பட்ட சமூகத்தை நேரடியாக குறிப்பிட்டு குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் இது தொடர்பாக சமூகநீதி சத்திரியர் பேரவை என்ற அமைப்பு காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தது. குறிப்பட்ட சமூகத்திற்கு எதிராக நடிகை கஸ்தூரி தொடர்ந்து கருத்து தெரிவித்து வருவதாகவும் அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும் நடிகை கஸ்தூரி பொய்யான கருத்துக்களை தெரிவித்து இரு பிரிவுகளிடையே வன்முறையை தூண்டி வருவதாகவும், அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment