இன்று முதல் காசிரங்கா தேசிய பூங்கா திறப்பு..யானை சபாரி கிடையாது.!

இன்று முதல் காசிரங்கா தேசிய பூங்கா திறப்பு..யானை சபாரி கிடையாது.!

இன்று முதல் “காசிரங்கா தேசிய பூங்கா” சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்படுகிறது.

அசாம் மாநிலத்தில் உள்ள ‘காசிரங்கா தேசிய பூங்கா’ கொரோனா காரணமாக ஏழு மாதங்கள் கழித்து இன்று முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்படுகிறது.

இதனை, அசாம் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் இந்த புகழ்பெற்ற பூங்காவை முறையாக மீண்டும் திறந்து வைக்கவுள்ளார். இந்நிலையில், மீண்டும் திறந்த பிறகு யானை சபாரிகள் கிடையாது. ஆனால், அவை நவம்பர் முதல் மீண்டும் தொடங்கும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா தோற்று காரணமாக இது மார்ச் மாதத்தில் மூடப்பட்டது.  இது, கடந்த 112 ஆண்டுகளில் மிகநீண்ட நாள்களாக மூடப்பட்டது இதுவே முதல்முறையாகும்.

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube