காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து! இதனால் என்னென்ன மாற்றங்கள் நிகழும்?!

காஷ்மீர் மாநிலமானது 1947ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த பிறகு அங்கு பாகிஸ்தான் ராணுவம் கைப்பற்ற முயற்சித்ததால் இந்திய ராணுவ துணையோடு அதனை முறியடித்தது. இதற்காக காஷ்மீர் மன்னர் சில ஒப்பந்தங்களுடன்  ஜம்மு காஸ்மீரை இந்தியாவுடன் இணைத்து கொண்டார்.

அதன் படி, காஷ்மீர் பாதுகாப்பு, காஷ்மீர் வெளிநாட்டு விவகாரம், தகவல் தொடர்பு ஆகியவற்றில் மட்டுமே இந்திய அரசாங்கம் தலையிட முடியும். மேலும், இந்திய அரசியல் சட்டம் 370இன் படி காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வாங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் காஷ்மீர் மாநிலமானது தன்னாட்சி அதிகாரம் பெற்றுள்ளது. அங்கு வசிக்கும் பூர்வகுடிகள் மட்டுமே காஷ்மீரில் நிலம் வாங்க விற்க முடியும். சட்டத்தை அம்மாநிலதிற்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளலாம். என பல்வேறு அந்தஸ்துகள் வழங்கப்பட்டுள்ளன.

இன்று கடும் அமளிக்கு நடுவில் நடந்த மாநிலங்களவை கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்படுவதாக அறிவித்தார். இந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்படுவதால்,  6 ஆண்டுகல மாநில ஆட்சி காலம்  5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியல் சட்டம் இனி காஷ்மீருக்கும் பொருந்தும். இனி வெளிமாநிலத்தவரும் காஷ்மீரில் நிலம் வாங்கலாம். ஜம்மு காஷ்மீர் எல்லைகளை கூட்டலாம் குறைக்கலாம்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.