காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் காலமானார்…!

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையது அலி ஷா கிலானி காலமானார்.

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையது அலி ஷா கிலானி அவர்கள்,  பல ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று காலை அவரது இல்லத்தில் கிலானியின் உயிர் பிரிந்துள்ளது.

இவரது மறைவுக்கு, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி இரங்கல் தெரிவித்துள்ளார். கிலானி தடை செய்யப்பட்ட ஜமாத்-ஏ-இஸ்லாமி அமைப்பின் உறுப்பினராக இருந்தார். பின் பிரிவினைவாத சார்பு கட்சிகளின் கூட்டமைப்பான தெஹ்ரீக்-ஏ-ஹூரியத் அமைப்பை நிறுவினார். அதனை தொடர்ந்து,  அனைத்துக் கட்சி ஹூரியத் மாநாடு அமைப்பின் தலைவராகப் பணியாற்றிய நிலையில்,  2020-இல் அப்பொறுப்பிலிருந்து விலகினார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.