காஷ்மீர் துணை நிலை ஆளுநர் முர்மு திடீர் ராஜினாமா! புதிய துணைநிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம்!

புதிய துணைநிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம்.

ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுநரான முர்மு தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இவர் என்ன காரணத்திற்காக தனது பதவியை ராஜினாமா செய்தார் என்று உறுதியான தகவல் வெளியகாத நிலையில், இவருக்கு மத்திய அரசு சார்பில் வேறு ஒரு முக்கிய பொறுப்பு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், முர்மு அவர்கள் தனது ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பிய நிலையில், அவரது ராஜினாமாவை குடியரசு தலைவர் ஏற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து தற்போது, புதிய துணைநிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் 2014 – 2019-ல் பாஜகவில் மத்திய அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.