காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து!ஜனநாயக படுகொலை ! மு.க.ஸ்டாலின் ஆவேசம்

இன்று மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.அப்பொழுது அவர் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது, ஜனநாயக படுகொலை. இந்த ஜனநாயக படுகொலைக்கு அதிமுக துணை போயிருப்பது கண்டிக்கத்தக்கது. காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஜம்மு காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு அமையும் வரை, மத்திய அரசின் அறிவிப்பை குடியரசுத் தலைவர் நிறுத்தி வைக்க வேண்டும். அறிக்கை அடிப்படை பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பும் முயற்சியாகவே இந்த முடிவு பார்க்கப்படுகிறது என்று தெரிவித்தார்.