#BREAKING: கரூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை – எம். ஆர் விஜயபாஸ்கர் முறையீடு..!

கரூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையை 3 அறைகளில் நடத்த வேண்டும் என எம்.ஆர்.விஜயபாஸ்கர் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.

கரூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை இரண்டு அறைக்கு பதிலாக மூன்று அறையில் வாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. கரூர் தொகுதியில் 77 வேட்பாளர்கள் போட்டியிட்டு இருப்பதால் அவர்கள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றுவதில் சிக்கல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாக்கு எண்ணிக்கையின் போது கொரோனா தடுப்பு விதிகளை முழுமையாக பின்பற்ற தேவையான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும்  குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் முகவர்களை அனுமதிக்க மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 77 வேட்பாளர்களின் முகவர்களை அனுமதித்தால் தனிமனித இடைவெளியை  பின்பற்ற முடியாத நிலை ஏற்படும் இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு  எடுத்துக்கொள்ள எம் ஆர் விஜயபாஸ்கர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan